முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முக்கோண கள்ளக்காதல்.! வெளிநாட்டு கணவர்.! நண்பருடன் உல்லாசம்.! கொலையில் முடிந்த பரிதாபம்.!

11:26 AM Dec 06, 2023 IST | 1newsnationuser4
Advertisement

திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக விஜயகுமார் என்ற நபர் தனது மனைவி மற்றும் நண்பனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்செய்யும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள மலையடிவாரத்தில் ஆடு மேய்க்க இளைஞர்கள் சென்றபோது அங்கு வெட்டப்பட்டிருந்த குழி ஒன்றில் மனித கால்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாக இருக்கிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் கடந்த ஒன்றாம் தேதி ராஜா என்ற நபர் தனது மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ராஜா அளித்த அங்க அடையாளங்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட நபர் அவரது மகன் விஜயகுமார் என காவல்துறை உறுதி செய்தது. மேலும் விஜய குமாரின் செல் போன் அழைப்புகளின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை மேற்கொண்ட போது அவரது நண்பரான ராகவேந்திரன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரும் விஜயகுமாரின் மனைவி வினிதாவும் சேர்ந்து மது வாங்கி கொடுத்து விஜயகுமாரை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். விஜயகுமார் வேலைக்காக மலேசியா சென்று இருந்தபோது அவரது நண்பரான ராகவேந்திரன் என்பவருக்கும் விஜயகுமாரின் மனைவி வினிதாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக விஜயகுமார் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதால் ராகவேந்திரன் மற்றும் அவரது மனைவி வினிதா இருவரும் திட்டம் போட்டு விஜயகுமாரை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வினிதா ராகவேந்திரன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராகவேந்திரனின் நண்பன் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
crimehusband and wifeIllicit affairpolice arresttiruppathur
Advertisement
Next Article