For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கற்பழிக்கப்பட்ட 22 வயது இளைஞர்.! கடத்திய 2 பேர் கைது.! 4 பேருக்கு வலைவீச்சு.!

12:11 PM Dec 02, 2023 IST | 1newsnationuser4
கற்பழிக்கப்பட்ட 22 வயது இளைஞர்   கடத்திய 2 பேர் கைது   4 பேருக்கு வலைவீச்சு
Advertisement

தஞ்சாவூர் அருகே 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் தெருவை சேர்ந்தவர் 22 வயது இளைஞரான விஜய். இவர் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் காலியான மது பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல பட்டிதோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தால்.

அப்போது மது அருந்த வந்த சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), பரணி (31) மற்றும் சரவணன் (32) மது போதையில் விஜய்யை தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். பின்னர் சூலமங்கலம் சென்று ஆள் இல்லாத பகுதியில் வைத்து அவரை கட்டாயப்படுத்தி தன் பாலின உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது முகத்தை கல்லால் சிதைத்து கொடூரமாக அடித்து படுகொலை செய்துள்ளனர்.

இந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஐயம்பேட்டை காவல்துறையினர் இறந்த விஜயின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் விக்னேஷ் மற்றும் அவருக்கு தங்க உதவி புரிந்த அருண் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சரவணன் பரணி ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
Advertisement