For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க."! திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு.! இளம் பெண்ணை கைது செய்த போலீஸ்.!

12:19 PM Dec 14, 2023 IST | 1newsnationuser4
 என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க    திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீச்சு   இளம் பெண்ணை கைது செய்த போலீஸ்
Advertisement

பீகார் மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது அவரது காதலி ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரிதா குமாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான தர்மேந்திர குமார் என்பவரை கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் வற்புறுத்தி இருக்கிறார் சரிதா.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது காதலன் தனக்கு வீட்டில் வேறு பெண் பார்த்து விட்டதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சரிதா குமாரி தனது நண்பருடன் இணைந்து தர்மேந்திர குமாரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தர்மேந்திர குமாரை பேச அழைத்து சரிதா குமாரி அவரது நண்பருடன் சேர்ந்து தனது காதலனின் முகத்தில் ஆசிட் வீசி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த தர்மேந்திர குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சரிதா குமாரியை கைது செய்திருக்கும் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Tags :
Advertisement