For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யார் இந்த ஆற்காடு சுரேஷ்..? ஒருவாரமாக நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்..!! 2000இல் தொடங்கிய பகை..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

What is the rivalry between Punnai Balu and Armstrong? Who is Arkadu Suresh? Many questions may arise in your mind. You can see the answers in this post.
01:35 PM Jul 06, 2024 IST | Chella
யார் இந்த ஆற்காடு சுரேஷ்    ஒருவாரமாக நோட்டமிட்ட ஆட்டோ ஓட்டுநர்     2000இல் தொடங்கிய பகை     வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவருக்கு பழைய வீடு இருந்துள்ளது. அதை இடித்து கட்டுமான பணி மேற்கொண்டு வந்திருக்கிறார். தினமும் அந்த பணிகளை பார்வையிட செல்வாராம். ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி அங்கு வருவதை நோட்டமிட்டு ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலுக்கு தகவல் கொடுத்துள்ளார் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் ஏன் புன்னை பாலுவுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..? புன்னை பாலுவுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை? ஆற்காடு சுரேஷ் என்பவர் யார்? இப்படி பல கேள்விகள் உங்களுக்குள் எழலாம். அதற்கான விடைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கடந்த 2000ஆண்டு வடசென்னையை கலக்கி வந்த ரவுடியான நாயுடுவை ஆற்காடு சுரேஷ் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பூந்தமல்லியில் வைத்து படுகொலை செய்ததில் இருந்து இப்பிரச்சனையை தொடங்கியது. நாயுடுவின் மரணத்தால் கதிகலங்கிபோன அவரது வலது கரங்களான தென்னரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணன் ஆகியோர் ஆற்காடு சுரேஷை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளார்களாம். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். பல கட்டப்பஞ்சாயத்து, ஆருத்ரா மோசடி உள்ளிட்ட நிதி நிறுவன விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் உடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

அந்த சமயத்தில், ஆற்காடு சுரேஷை கொலை செய்ய தென்னரசு மற்றும் பாம் சரவணனிற்கு ஆம்ஸ்ட்ராங் பண உதவி மற்றும் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளார். இதையறிந்து, கடந்த 2015ஆம் ஆண்டு தென்னரசை ஆற்காடு சுரேஷ் கும்பல் கொலை செய்தது. இதனால் உடனடியாக ஆற்காடு சுரேஷை தீர்த்துக்கட்ட ஆர்ம்ஸ்ட்ராங் ஸ்கெட்ச் போட்டதாகவும், கூட்டாளி ஒத்தக்கண்ணு ஜெயபால் மூலமாக கூலிப்படையை ஏவி கடந்த ஆண்டு (2023) பட்டினபாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேஷை கொலை செய்தாகவும் கூறப்பட்டது.

ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலுவையும் ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் புன்னை பாலு, தன்னை ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யும் முன் தான் அவரை கொலை செய்திட வேண்டும் என பிளான் போட்டுள்ளார். அதுவும், படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலோ, நினைவு நாளுக்குள்ளோ கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். நேற்றைய தினம் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால், நேற்று அவர்கள் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலையை செய்ததாக, விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் புன்னை பாலு.

இந்த விஷயத்தில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வாரமாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டுள்ளார். திருமலையின் தகவலின்பேரில், நேற்று உணவு டெலிவரி செய்வது போல நடித்து, அந்த இடத்துக்கு சென்றிருக்கிறார் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் அருள். அங்கு, ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதுதொடர்பான 8 பேர் நள்ளிரவில் போலீஸிடம் சரண் அடைந்தனர்.

Read More : மேடையில் விஜய்யை கோபப்படுத்திய மாணவியின் தந்தை..!! புஸ்ஸி ஆனந்த் பார்த்துருந்தா அவ்வளவு தான்..!! வைரலாகும் வீடியோ..!!

Tags :
Advertisement