For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர்கள் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே செல்வார்கள்..!! நானும் அப்படித்தான்..!! நடிகை ஷகிலா பகீர் தகவல்..!!

When the actors call for adjustments, the heroines themselves go.
04:25 PM Aug 30, 2024 IST | Chella
நடிகர்கள் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே செல்வார்கள்     நானும் அப்படித்தான்     நடிகை ஷகிலா பகீர் தகவல்
Advertisement

நடிகை ரூபா ஸ்ரீக்கு நடந்த கொடுமை பற்றி நடிகை ஷகிலா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், ”பெரும்பாலும் நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதில்லை. இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தான் அழைப்பார்கள். நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே சென்று விடுவார்கள். காரணம் அவர் ஒரு ஹீரோ. அவர் நம்மை கூப்பிட மாட்டாரா என்று கூட நினைப்பு இருக்கும். அதுதான் பெண் மனது.

Advertisement

எல்லா பெண்களுக்கும் அந்த நினைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்த சில பெண்களுக்கும், எனக்கும் அப்படித்தான் இருக்கும். ஹீரோவுடனான அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பெரிய கம்ப்ளைன்ட் வந்திருக்காது. இயக்குநர், மேனேஜர், தயாரிப்பாளர் கூப்பிடுவது தான் இங்கு பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கும். நடிகை ரூபாஸ்ரீ உடன் நான் ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். நான் துணை கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அப்போது நடு இரவில் மது அருந்திய சிலர், அவரது ஹோட்டல் ரூமை தட்டினர். இதையடுத்து நாங்கள் எல்லாம் வெளியே வந்து பார்த்தோம். அப்போது அவளின் ரூமிற்கு வெளியே சிலர் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். நான் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு என்னுடைய தம்பி உள்ளிட்டோருடன் தான் செல்வேன். பின்னர், அவர்களுடன் சேர்ந்து சண்டைக்குச் சென்றோம். அப்போது அதிலிருந்து ஒரு ஆள் என்னை அடிக்க, நான் திருப்பி அவரை அடித்தேன்.

அப்போது அமெரிக்காவில் இருந்து ஒருவர் அங்கு ஷூட்டிங்கிற்கு வருவார். அவரிடம் பேசி பிரச்சனையை சமாளித்து ரூபா ஸ்ரீயை சென்னைக்கு அனுப்பி வைத்தோம். இதுபோன்று நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது" என்று பேசினார்.

Read More : பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement