For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகம் இதனால் தான் அழியப்போகிறது.. அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்ட நிறுவனம்.!?

05:01 PM Jan 13, 2024 IST | 1newsnationuser5
உலகம் இதனால் தான் அழியப்போகிறது   அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்ட நிறுவனம்
Advertisement

உலகம் அழியப்போகிறது என்று ஒவ்வொரு வருடமும் கூறி வருகின்றனர். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களின் பெயரில் உலகத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றது. உலகம் அழியப்போவது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்கள் கூறி வந்த நிலையில் அதை வைத்து ஹாலிவுட் படங்கள் கூட வெளிவந்து விட்டன. ஆனால் உலக அழிவு குறித்து யாருக்கும் துல்லியமாக தெரிய வாய்ப்பில்லை என்பதே உண்மை.

Advertisement

இது போன்ற நிலையில் உலகம் இப்படித்தான் அழியப்போகிறது என்று புதிய ஆய்வு அறிக்கையை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது வளிமண்டல அடுக்குகளில் மிகப் பெருமளவு மாற்றம் ஏற்படப்போகிறது என்றும், இதனால் பூமியில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் சுமார் 2.4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸிஜனேற்றம் அதாவது வளிமண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டு ஆக்ஸிஜனின் அளவு அதிகரித்ததினால் தான் பல உயிரினங்கள் அழிந்து மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் தோன்றியது. இவ்வாறே வளிமண்டல மாற்றத்தால் நடக்கவிருக்கும் ஆக்சிஜனேற்ற நிகழ்வின் காரணமாக மனித உயிர்கள் மிகப்பெரிய அழிவுக்கு உள்ளாகலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அப்படி இல்லையென்றால் சூரிய கதிர்வீச்சு பூமியில் அதிகரித்து ஆக்ஸிஜனின் அளவு பன்மடங்கு குறையும் என்றும், இதனால் ஆக்ஸிஜனை சுவாசித்து வாழும் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் அழிவு மிகக் கொடூரமாக ஏற்படும் என்றும் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement