For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்ன ஒரு ஆச்சரியம்!… ஆண்டுகள் கடந்தாலும் காசியில் இந்த அதிசயங்கள் மட்டும் என்றும் மாறாது!

09:45 AM Dec 13, 2023 IST | 1newsnationuser3
என்ன ஒரு ஆச்சரியம் … ஆண்டுகள் கடந்தாலும் காசியில் இந்த அதிசயங்கள் மட்டும் என்றும் மாறாது
Advertisement

அன்று வாழ்ந்த அரகர்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காசியில் ஐந்து சிறப்பம்சங்களை செய்ததாக கூறப்படுகிறது. அந்த ஐந்தும் மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் ஆகும். அதன்படி, கங்கை கரையில் இருக்கும் அந்த ஐந்து அதிசயங்கள் என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பிணம் எரியும் சமயத்தில் அருகில் நின்றிருக்கிறீர்களா? ஏன் இப்படி கேட்கிறேன் என்றால், பிணம் பிணத்தை எரிக்கும் போது அதிலிருந்து வரும் வாடையை வார்த்தையால் கூற முடியாது. அந்த அளவிற்கு மோசமாக இருக்கும். ஆனால் இங்கு பிணத்தை எரிக்கும் போது எந்தவிதமான துர்நாற்றமும் வராது.

Advertisement

இங்கு விளையும் சாமந்திப் பூவில் வாசம் வராது. குறிப்பாக காசியில் இந்தப் பூக்கள் அதிகமாக கிடைக்கும். ஆனாலும் அவற்றில் ஒருபோதும் வாசம் வருவதில்லை. சொல்லப்போனால் அவை காகிதப்பூ போல் இருக்கும். ஆனால் வெளியூரில் விளையும் இந்த பூவை காசிக்கு கொண்டு வந்தால் அவை மணக்கும். ஆனால் காசியில் இருக்கும் இந்த சாமந்திப்பூவோ விளையும் போதே மணப்பதில்லை. உங்களுக்கு தெரியுமா இங்கு இருக்கும் பசுக்கள் கடவுளை விட அதிகமாக மதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் பசுக்கள் ஒருபோதும் கட்டப்படுவதில்லை. அதுபோல் இங்கு இருக்கும் பசுக்கள் மனிதர்களை முட்டாது. குறிப்பாக இங்கு இருக்கும் பசுவை யாரும் துன்புறுத்துவதில்லை. ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை இந்த ஐந்து அற்புத விஷயங்கள் இயற்கையாகவே நடந்து கொண்டிருக்கிறது

Tags :
Advertisement