முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முக்கிய அறிவிப்பு...! வார இறுதி நாள்... பௌர்ணமி முன்னிட்டு மட்டுமே கோயம்பேட்டில் சிறப்பு பேருந்து...!

05:50 AM May 21, 2024 IST | Vignesh
Advertisement

வார இறுதி நாட்கள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

Advertisement

இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பஸ்களை கோயம்பேடு பேருந்து நிலைத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் 23.05.2024 முதல் திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு 24.05.2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article