For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுக வெற்றி கூட்டணி.! சீட் முடிவான பின்பு தொகுதி குறித்து பேச்சு வார்த்தை.! பத்திரிகையாளர் சந்திப்பில் துரை வைகோ தகவல்!

05:37 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
திமுக வெற்றி கூட்டணி   சீட் முடிவான பின்பு தொகுதி குறித்து பேச்சு வார்த்தை   பத்திரிகையாளர் சந்திப்பில் துரை வைகோ தகவல்
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மெகா கூட்டணியை உருவாக்கியது.

Advertisement

சில மாநிலங்களில் இந்தக் கூட்டணியில் மோதல் போக்கு நீடித்தாலும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறது. மேலும் இந்தக் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பும் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கட்சியும் திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோவின் மகன் துரை வைகோ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் கேட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவிலேயே பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என கூறிய அவர் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது முடிவான பின்பு போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து திமுகவுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தொண்டர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்தும் திமுகவுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

English Summary: MDMK will discuss with dmk regarding parliament seats. Once the count is fixed then we will discuss about the constituency to contest durai vaiko told reporters.

Tags :
Advertisement