முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உளவுத்துறையில் இருந்து எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வரவில்லை’..!! ’ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்னணி’..? சென்னை காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!!

Chennai Police Commissioner Sandeep Rai Rathore said that there was no intelligence alert regarding the assassination of BSP state president Armstrong.
03:45 PM Jul 06, 2024 IST | Chella
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் (54) வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்ணாநகரில் உள்ள காவல்நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை வழக்குத் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் இதற்கிடையே, 3 முறை உளவுத்துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புலனாய்வு அமைப்புகளிடமிருந்து எந்த உளவுத் தகவலும் வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது என்பது குறித்து இடம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. ஆற்காடு சுரேஷ் சிறையில் இருந்தபோது சில சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே தற்போது கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும்” என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Read More : பத்திரப்பதிவு செய்யும் முன் இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

Tags :
ஆம்ஸ்ட்ராங்ஆற்காடு சுரேஷ்கொலைகொலை வழக்குசென்னை காவல் ஆணையர்
Advertisement
Next Article