For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’எங்களை அவமானப்படுத்துறீங்க’..!! ’இப்படிப்பட்ட காவலர்களை பார்த்ததே இல்லை’..!! ஜி.கே.மணி வேதனை..!!

We are law abiding policemen. A peaceful protest was disrupted by 2 policemen.
10:27 AM Oct 05, 2024 IST | Chella
’எங்களை அவமானப்படுத்துறீங்க’     ’இப்படிப்பட்ட காவலர்களை பார்த்ததே இல்லை’     ஜி கே மணி வேதனை
Advertisement

தருமபுரி - காவேரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று அரைநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் 100 விழுக்காடு வெற்றி பெற்றது. இந்தப் போராட்டத்தில் பேராதரவு கொடுத்த ஒட்டுமொத்த தருமபுரி மாவட்ட வணிகர் சங்கத்திற்கும், வியாபார பெருமக்களுக்கும், தேநீர் கடை, சிறு பெட்டிக்கடை முதல் பெரிய மளிகை கடை, துணிக்கடை வரையில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவல்துறையின் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள் நாங்கள். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை 2 காவலர்கள் சீர்குலைத்துவிட்டனர். ஊடக நண்பர்களின் மைக்கை பிடிங்கி எறிந்துவிட்டனர். எங்களை அவமானப்படுத்துறீங்க பரவால நாங்க பொருத்துக்குறோம், சகிச்சிக்கிறோம்.. ஆனா இது மட்டும் ரொம்ப வேதனையா இருக்கு.

இந்த 2 காவலர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களிடம் அதிகாரம் இருக்கு மிரட்டுறாங்க. இப்படிப்பட்ட அதிகாரிகளை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை” என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார்.

Read More : தம்பதிகளிடம் அடிக்கடி உடலுறவு இல்லாவிட்டாலும் பிரச்சனையா..? அப்புறம் இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்..!!

Tags :
Advertisement