For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கண் திருஷ்டியை ஓட ஓட விரட்ட வைக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.? எப்படி செய்யலாம்.?

Generally we have heard our elders say that 'even if you are stoned, you should not be stoned'. To that extent, Kantirushti is considered a very powerful negative energy.
05:40 AM Jun 22, 2024 IST | Baskar
கண் திருஷ்டியை ஓட ஓட விரட்ட வைக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்   எப்படி செய்யலாம்
Advertisement

பொதுவாக "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்று நம் பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவிற்கு கண்திருஷ்டி என்பது மிகவும் சக்தி வாய்ந்த எதிர்மறையான ஆற்றலாக கருதப்பட்டு வருகிறது. ஒருவர் மீது கண்திருஷ்டி பட்டு விட்டால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கண் திருஷ்டியால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஜோதிட சாஸ்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண் திருஷ்டியை எப்படி சரி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தேவையான பொருட்கள் :

* ஒரு கற்றாழை செடி

* கல் உப்பு

* மஞ்சள் சிறிதளவு

* தண்ணீர்

* வேப்பிலை

* சாம்பிராணி பொடி

செய்முறை :

முதலில் உப்பினால் அறுங்கோணம் வரைந்து அதன் நடுவில் கற்றாழையை வைக்க வேண்டும். சாம்பிராணியை தூபமிட்டு, ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து வேப்பிலையை மஞ்சள் தண்ணீரால் நினைத்து கொள்ளவும். பின்பு "ஓம் சிவாய நம" என 21 முறை சொல்லி வீடு முழுவதும் தூபமிட்டு வேப்பிலையை வைத்து மஞ்சள் தண்ணீரால் தெளித்து விட வேண்டும்.

பின்பு அருங்கோனத்தில் இருந்து சிறிதளவு உப்பை எடுத்து மஞ்சள் கலந்த தண்ணீரில் சேர்த்து வீடு முழுவதும் துடைத்து விடவும். இவ்வாறு துடைக்கும் போது வீட்டில் உள்ள தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டி போன்றவை விலகும் என்று நம்பப்பட்டு வருகிறது.

Read More : வட்டியை கொட்டிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! மாத வருமானம் இவ்வளவு கிடைக்குமா..?

Tags :
Advertisement