For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புயலை கிளப்பிய விஜய்..!! ஆட்சியில் பங்கு வேண்டும்..!! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த பரபரப்பு கடிதம்..!!

Congress state general secretary Saravanan has written a letter to Chief Minister Mukherjee Stalin asking for a share in the government.
04:35 PM Oct 28, 2024 IST | Chella
புயலை கிளப்பிய விஜய்     ஆட்சியில் பங்கு வேண்டும்     முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த பரபரப்பு கடிதம்
Advertisement

விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மையும், நம் செயல்பாட்டையும் நம்பி நம்மோடு சில பேர் வரலாம்.

Advertisement

அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருவோரி நாம் அரவணைக்க வேண்டும் அல்லவா..? அதனால், நம்மை நம்பி வருகிறவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். 2026ஆம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம்.சரவணன் முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

எனவே, நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். உங்கள் (ஸ்டாலின்) தலைமையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது என தமிழக மக்களும் எதிர்பார்ப்பதாக” சூசகமாக செக் வைத்துள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் தர போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More : குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிரடி உயர்வு..!!

Tags :
Advertisement