For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! இன்று மற்றும் நாளை தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவு...!

06:15 AM Jun 04, 2024 IST | Vignesh
தமிழகமே     இன்று மற்றும் நாளை தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவு
Advertisement

இன்று மற்றும் நாளை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் இன்று மற்றும் நாளை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறை: "துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள், சப்ளையை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், கட்டுபாட்டு ஒருங்கிணைத்து விரைவாக மறு சீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.

Tags :
Advertisement