For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாரம் இரண்டு முறை மட்டும் வீட்டில் இப்படி பண்ணி பாருங்க..!! பண மழை கொட்டும்..!!

05:10 AM Apr 26, 2024 IST | Chella
வாரம் இரண்டு முறை மட்டும் வீட்டில் இப்படி பண்ணி பாருங்க     பண மழை கொட்டும்
Advertisement

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் அதிகம் இருக்கும். ஆனால், உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. பண்டிகை நாட்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை, உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும். உப்பு ஜாடியில் எப்போதும் உப்பு நிரப்பி இருக்க வேண்டும். வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

Advertisement

இன்று வீடு சுத்தம் செய்ய பல திரவங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதை கொண்டு வீட்டை சுத்தம் செய்வதை விட கோமாதா சாணத்தை வைத்து வீட்டை துடைத்தால் அந்த வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும். வீட்டு வாசலில் அரிசி மாவில் கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது, சாணத்தை கொண்டு வீட்டை துடைப்பது, பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நல்ல செயல்களை பின்பற்றி வந்தால் செல்வதை கொடுக்கும் லட்சுமி தயார் வீட்டில் வாசம் செய்வார்.

வீட்டு பூஜை அறையில் காலை மற்றும் மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மண் அகல் அல்லது காமாட்சி விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம் நீங்கும். வரவு பல மடங்கு அதிகரிக்கும். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மாலையில் வீட்டை சுத்தம் செய்த பின்னர் விளக்கேற்றி கடவுளை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.

Read More : ரூ.5,00,000 வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம்..!! பிரதமரின் இந்த காப்பீடு திட்டம் பற்றி தெரியுமா..?

Advertisement