முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி: "பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது.." பின்னணியில் சதித்திட்டமா.? காவல்துறை தீவிர விசாரணை.!

08:56 PM Jan 16, 2024 IST | 1newsnationuser7
Advertisement

திருச்சி மணிகண்டம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓலையூர்-மணிகண்டம் சாலையில் 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து 5 பேரையும் சுற்றி வளைத்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாள் இரும்பு கம்பி மற்றும் சுத்தியல் போன்ற பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் வெட்டு சங்கர் என்ற ஜெய்சங்கர்(25), லோகநாதன்(25), வினோத்(21), குழந்தை ராஜ்(34) மற்றும் வீரையன்(26) ஆகியோரை கைது செய்தனர்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயங்கர ஆயுதங்களுடன் கொலை மற்றும் கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட பதுங்கி இருந்தார்களா.? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கர ஆயுதங்களுடன் 5 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
5 People ArrestedcrimePolice Enquirpolice enquiryTamilnaduTiruchirapalli
Advertisement
Next Article