For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிதாக விண்ணப்பித்துள்ளீர்களா..? பெண்களே இன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வரப்போகுது..!!

Today the entitlement of Rs.1,000 for this month will be credited to the bank account of the eligible women.
07:58 AM Aug 15, 2024 IST | Chella
புதிதாக விண்ணப்பித்துள்ளீர்களா    பெண்களே இன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ 1 000 வரப்போகுது
Advertisement

தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் ஏற்கனவே பலருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதில், குடும்ப தலைவி ஆகும் பெண்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 15) இந்த மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத்தொகை தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

Advertisement

இதற்கிடையே, புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி, புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இப்போது இல்லையென்றாலும், அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!! திருமாவை இப்படி சொல்லிட்டாரே..!!

Tags :
Advertisement