For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோட்...! குரூப் -2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Tomorrow is the last day to apply for Group-2 exam
09:39 AM Jul 18, 2024 IST | Vignesh
நோட்     குரூப்  2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Advertisement

குரூப் -2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

Advertisement

உதவி தொழிலாளர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 507 காலியிடங்கள் குரூப்-2 தேர்வு வாயிலாகவும், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்கள் குரூப்-2-ஏ தேர்வு வாயிலாகவும் (மொத்தம் 2,327) நிரப்பப்பட உள்ளன.

இதில் உதவி தொழிலாளர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 507 காலியிடங்கள் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி நாளை மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement