For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

A holiday has been announced for schools, colleges and government offices across Tuticorin district tomorrow.
12:13 PM Aug 04, 2024 IST | Chella
இந்த மாவட்ட பள்ளி  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை     ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்
Advertisement

உலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கோலாகலமாக 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில், தூத்துக்குடியில் இந்தாண்டு 442-வது ஆண்டு பனிமய மாதா பேராலய திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

இந்நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டு அறிவிப்பில், “தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழக மக்களே..!! மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புகளை கவனிச்சீங்களா..? அனைவரது வீட்டிலும் இது முக்கியம்..!!

Tags :
Advertisement