For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்.23) உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

05:10 AM Apr 23, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று  ஏப் 23  உள்ளூர் விடுமுறை     ஆட்சியர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமி கொண்டாடப்பட உள்ளது. அதனால், அன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெறவுள்ளது.

அதனால் தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூல அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும். மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement