For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இல்லற வாழ்வு கமகமக்க.! கற்பூரத்தில் ஒரு தலையணை மந்திரம்.! அட்டகாசமான பரிகாரம்.!

05:15 AM Dec 22, 2023 IST | 1newsnationuser4
இல்லற வாழ்வு கமகமக்க   கற்பூரத்தில் ஒரு தலையணை மந்திரம்   அட்டகாசமான பரிகாரம்
Advertisement

ஒவ்வொரு மனிதர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையே விரும்புவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றால் கணவன் மற்றும் மனைவி இடையே அன்பும் பரஸ்பரமான புரிந்துணர்வும் அவசியம். சில நேரங்களில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதுபோன்ற சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பல எளிய வழிகளை கற்றுத் தருகிறது. இந்த எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் இல்லறம் சிறக்கும்.

Advertisement

கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால் இருவரும் உறங்கும் முன்னர் தலையணைக்கடியில் கற்பூரத்தை வைக்க வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் அந்த கற்பூரத்தை எடுத்து எரிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடிக்கும் வரை யாரும் உங்களை தொந்தரவு செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் சச்சரவுகள் நீங்கி பேரின்பம் அதிகரிக்கும்.

இந்தக் கற்பூரத்தை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும்போது மனநிலை மேம்படுவதோடு எதிர்மறை சிந்தனைகளும் மறைந்து விடுவதாக வாஸ்து சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பரிகாரத்தை ஒரு மண்டலத்திற்கு ஒருவர் செய்து வந்தால் அந்த ஜோடிகளுக்கிடையே ஏற்பட்ட எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் விரைவிலேயே சுமுகமான தீர்வு எட்டும் எனவும் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement