தொடங்கியது ஜனநாயகத் திருவிழா: முதல் ஆளாக வாக்களிக்க சென்ற பிரபலங்கள்..!
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467. மேலும் முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கு 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்த நடிகர் அஜித்குமார், 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த அவர் முதல் ஆளாக தற்போது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சக்காவடி மையத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனி சாமீ குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "புதிய தலைமுறை வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என" கூறினார்.
தருமபுரி பாமக வேட்பாளர் சௌமிய அன்புமணி தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மூக்கையா தலைவர்கள் ஜனநாயக கடமையி ஆற்ற வாக்குச்சாவடி மைத்தற்கு சென்று வருகின்றனர்.