TN JOB | தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! ரூ.35,000 வரை சம்பளம்..!!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு வருவாய்த் துறை
பணி : கிராம உதவியாளர்
மொத்த காலியிடங்கள் : 2299
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் :
அரியலூர் - 21, சென்னை - 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66, திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27, கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, நாமக்கல் - 68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம் - 105, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தேனி-25, திருவண்ணாமலை - 103, தென்காசி - 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31.
கல்வித்தகுதி : குறைந்தபட்ச கல்வித்தகுதி 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை
பதவி உயர்வு : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 - 32, 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.
Read More : Android Phone | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!