For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அரசில் நூலகர் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Thoothukudi Information and Public Relations Office has published a notification to fill 3 vacancies in the posts of Librarian and Caretaker.
12:40 PM Oct 13, 2024 IST | Mari Thangam
10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்    தமிழ்நாடு அரசில் நூலகர் வேலை     ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

தூத்துக்குடி தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் பராமரிப்பாளர் பணிகளில் உள்ள 3 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வயது வரம்பு : இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : இந்த பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் ரூ.7,500 முதல் ரூ.24,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.thoothukudi.nic.in என்ற தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவத் தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மண்டலத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி மாவட்டம் 626101 என்ற முகவரிக்கு 18.10.2024 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; வதந்திகளை நம்பாதீங்க.. Group 4 பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பாக TNPSC விளக்கம்

Tags :
Advertisement