முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு’..!! ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!!

08:48 AM Mar 27, 2024 IST | Chella
Advertisement

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜகவில் சீட் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் தனது பலத்தை நிரூபிக்க ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே, ராமநாதபுரம் தொகுதியில் நேற்று முன்தினம் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறுகையில், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த சதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Read More : அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு..!!

Advertisement
Next Article