For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெல்லையில் 100 ஆண்டுகளுக்கு முன்பே இதுநடந்ததாம்!… அதே ஊர்கள்!… அதே வெள்ளம்! "1923"ஆங்கில நாளிதழின் அதிர்ச்சி செய்தி!

06:24 PM Dec 21, 2023 IST | 1newsnationuser3
நெல்லையில் 100 ஆண்டுகளுக்கு முன்பே இதுநடந்ததாம் … அதே ஊர்கள் … அதே வெள்ளம்   1923 ஆங்கில நாளிதழின் அதிர்ச்சி செய்தி
Advertisement

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் உருவான மழையானது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்டு சென்றுள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக பயங்கரமான வெள்ளத்தை சந்தித்துள்ளன. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 100 செ.மீ.க்கு மேலே மழை அளவு பதிவானதை எல்லாம் வானிலை ஆய்வு மையமே கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன.

Advertisement

கொக்கரக்குளத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை மறைத்துக் கொண்டு ஓடியதையும், நெல்லை ஜங்ஷனும், டவுணும் மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதையும், ஸ்ரீவைகுண்டம் முதலான கிராமங்கள் முழுக்க முழுக்க வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது இது கனவா அல்லது நிஜமா என்று தான் கேட்கவே தோன்றியது. ஏனெனில் நெல்லையில் தற்போது இருக்கும் மிக வயதானவர்கள் கூட இப்படியொரு மழை வெள்ளத்தை பார்த்தது இல்லை என்று தான் சொல்கிறார்கள்.

இந்தநிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'தி இந்து' ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியான அந்த நாளிதழில் பிரசுரமாகி இருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கடந்த 4 நாட்களாக (அப்படியென்றால் டிச.16-ம் தேதி முதல்.. இப்போதும் அதே தேதியில்தான் வெள்ளம் ஏற்பட்டது) மிக மிக அதிக அளவிலான வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர, மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலைகளும் நிரம்பி ஓடுகின்றன. திருநெல்வேலி டவுண், சன்னியாசிகிராமம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் 5 அடிக்கும் அதிகமாக வெள்ளம் ஓடுகிறது.

திருநெல்வேலி ஆற்றுப்பாலம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் பல ரயில் நிலையங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சுற்றி வெள்ளம் ஓடுவதால் ரயில்வே பணியாளர்கள் குடியிருப்புகளும், பல சொத்துகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி பல பகுதிகளில் உள்ள அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. டெலிகிராப் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்துக்கு அடியில் சென்றுவிட்டன. தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் இடையேயான ரயில் தண்டவாளம் சேதமாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement