முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”இந்த 2 பேரும் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியில்லை”..!! அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்..!!

05:54 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி இல்லை என்று சொல்லி 2 போட்டியாளர்களை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Advertisement

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமோ என்ற அச்சமும் போட்டியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு சரியாக நேரம் கணித்து சொல்ல வேண்டும் என பல டாஸ்க் நடக்கிறது. மேலும், ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு நேரடியாக ஒருவர் இறுதிப் போட்டிக்கும் செல்லலாம். அந்த வகையில் இந்த வாரம், டிக்கெட் டூ ஃபினாலேக்கு செல்ல தகுதியில்லாத இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து சொல்ல சொல்கிறார் பிக்பாஸ்.

அதன்படி, பெரும்பாலான போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் ஆகிய இருவரையும் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு தகுதியில்லாதவர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் அர்ச்சனா பெயரை தினேஷூம் சொல்லி இருக்கிறார். இதனால், அர்ச்சனா கோபமடைந்து விசித்ராவிடம் புலம்பி வருகிறார். ’அண்ணா என கூப்பிட்டேன். ஆனால், கூடவே இருந்துவிட்டு இவர் இப்படி பண்ணிருக்கிறது கடுப்பா இருக்கு’ எனக் கூறியுள்ளார்.

Tags :
அர்ச்சனாபிக்பாஸ் நிகழ்ச்சிவிஜய்விஜய் டிவி
Advertisement
Next Article