முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரண்டில் ஒன்று இருக்காது!… தேர்தலுக்குபின் அது நிச்சயம் நடக்கும்!… அதிமுக குறித்து அண்ணாமலை சாடல்!

07:09 AM Apr 11, 2024 IST | Kokila
Advertisement

Annamalai: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும் என்று அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Advertisement

கோவையில் தனியார் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் வாக்காளர்கள்.

2024ஆம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி கரைந்து போகும். காரணம், ஒரு கட்சியின் கூட்டணி பலமாக இருப்பதால் அது உடனே கரைய வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு திராவிட கட்சி கரைந்து போகும். திமுக எதிர்ப்புக்காக ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா? திமுக எதிர்ப்பு என்பது ஒரு கொள்கையே கிடையாது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Readmore: இதெல்லாம் ஒரு வழக்கா?… வழக்கறிஞரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!

Advertisement
Next Article