For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'கூட்டமே இல்ல’..!! நாளை முதல் 2 வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு..!!

11:14 AM May 16, 2024 IST | Chella
 கூட்டமே இல்ல’     நாளை முதல் 2 வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு
Advertisement

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சினிமா துறையில் இருக்கும் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அந்தவகையில், விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டன.

Advertisement

இந்நிலையில், பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டில் இல்லை தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக சிறிய அளவே இருக்கிறதாம். மேலும், ஐபிஎல் போட்டியால் அந்த எண்ணிக்கை மேலும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வரும் 17ஆம் தேதி முதல் அடுத்த 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களை மூட இருப்பதாக தெலங்கானா தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More : மாதந்தோறும் ரூ.5,500 வருமானம் வேண்டுமா..!! போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

Advertisement