For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சம்பவம் இருக்கு..!! தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்..!!

02:48 PM Dec 22, 2023 IST | 1newsnationuser6
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சம்பவம் இருக்கு     தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
Advertisement

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு வட்சதீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 - 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் அன்று (டிச.25) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement