For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற வாலிபர்கள்..!! நொடிப்பொழுதில் தப்பித்த பரபரப்பு சம்பவம்..!! மாவுக்கட்டு கன்பார்ம்..!!

Suddenly they took out their hidden sword and tried to cut the sub-inspector.
11:52 AM Sep 18, 2024 IST | Chella
சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற வாலிபர்கள்     நொடிப்பொழுதில் தப்பித்த பரபரப்பு சம்பவம்     மாவுக்கட்டு கன்பார்ம்
Advertisement

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் தலைமையில் பாளையங்கோட்டை - சீவலப்பேரி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனர். இதனைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றனர். இதனை நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட பிரித்விராஜ் அங்கிருந்து சற்று தள்ளிச் சென்றார்.

இதனால், அவரின் உயிர் தப்பித்தது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக 4 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சூரியா மகன் தினேஷ் (21), கடல்கண்ணன் மகன் ஆனந்தன் (20), சம்பத் மகன் குணா (20), நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த கவியரசன் (20) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாலிபர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சா, வாள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு கவியரசனுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ’கமல் படங்களில் நடிகைகளுக்கு இந்த நிலைமை தான்’..!! ’கண்டிப்பா அது இருக்கும்’..!! ’இதுக்குத்தான் நான் நடிக்கல’..!! ராதிகா பரபரப்பு தகவல்..!!

Tags :
Advertisement