For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிச்சயதார்த்த விழாவுக்கு சென்ற இளம்பெண்..!! குடிபோதையில் பலாத்காரம் செய்த இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

A young man has been arrested after sexually harassing a young woman who was with his friend and then ran away.
04:44 PM Oct 19, 2024 IST | Chella
நிச்சயதார்த்த விழாவுக்கு சென்ற இளம்பெண்     குடிபோதையில் பலாத்காரம் செய்த இளைஞர்     அதிர்ச்சி சம்பவம்
Advertisement

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், கேரள மாநிலம் வர்கலாவில் நண்பரின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக தனது தோழியுடன் சென்றிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் கொல்லம், சாஸ்தம்கோட்டா, அர்ஷனா மன்சில் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர்ஷா (வயது 23). இவர், வர்கலாவில் ஹெலிபேட் கொச்சுவிளாமுக் அருகே நண்பரின் நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றுள்ளார். இந்த விழாவில் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது தோழியும் கலந்துக் கொள்வதற்காக வர்க்கலாவுக்கு வந்திருக்கின்றனர். இவர்கள், இருவரும் அதே பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந்த ரிசார்ட்டுக்கு அருகே அன்வர்ஷா, குடிபோதையில் இருந்தபோது, நள்ளிரவு 1.15 மணியளவில் இளம்பெண்ணைத் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றார். பின்னர், இளம்பெண்ணை தாக்கிவிட்டு, அன்வர்ஷா இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து சென்ற ரோந்து போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேல் விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More : தவெக மாநாடு..!! அனுமதியின்றி வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு வயதான பனைங்கன்றுகள்..!! வெடித்த புதிய சர்ச்சை..!!

Tags :
Advertisement