For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செக்...! சிம் கார்டுகளை வாங்க புதிய நடைமுறை 2024 முதல் அமல்...! மூன்று ஆண்டு சிறை + ரூ.50 லட்சம் அபராதம்...!

06:00 AM Dec 28, 2023 IST | 1newsnationuser2
செக்     சிம் கார்டுகளை வாங்க புதிய நடைமுறை 2024  முதல் அமல்     மூன்று ஆண்டு சிறை   ரூ 50 லட்சம் அபராதம்
Advertisement

சிம் கார்டுகளை வாங்க புதிய நடைமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக தொலைத்தொடர்பு வளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது முக்கியம்.

Advertisement

2023ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, தற்போது சட்டமாக மாற குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்த சட்டம் இயற்றப்பட்டதும், புதிய மொபைல் எண்களைப் பெறுவதற்கான நடைமுறையில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் சிம் கார்டுகளை வாங்குவதற்கு தேவையான அடையாளம் 'பயோமெட்ரிக்' ஆக இருக்கும் என்று மசோதா குறிப்பிடுகிறது. தற்போது, கேஒய்சி நோக்கங்களுக்கான பயோமெட்ரிக் அடையாளம் தனிநபரின் ஆதார் எண்ணை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் விளைவாக, ஆதார் இல்லாத ஒரு தனிநபரால் புதிய சிம் கார்டை வாங்க முடியாமல் போகலாம் என்று கருதுவது நியாயமானது.

2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய சிம்கார்டுகளை வாங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்களை சரி பார்ப்பது கட்டாயம், மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Tags :
Advertisement