முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வழக்கு தொடர்பாக வந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்த வக்கீல்..!! வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்..!!

A woman from Nagercoil, Kanyakumari district, who was raped by a lawyer, has caused shock and excitement.
07:54 AM Oct 23, 2024 IST | Chella
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண், வக்கீல் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவரின் பெற்றோர் இறந்து விட்ட நிலையில், அவரது தாயாரின் ஓய்வூதிய பணம் நிலுவையில் இருந்து வந்துள்ளது. இந்தப் பணத்தை மீட்க தோழி ஒருவரின் ஆலோசனையின் பேரில் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்துள்ளார் அப்பெண்.

இந்நிலையில், கடந்தாண்டு வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கூறிய வக்கீல், அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார்.

அந்தப் பெண்ணின் கருவை கலைக்க மாத்திரைகளை கொடுத்த வக்கீல், அவரது ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார். தனக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கொலை செய்து விடுவதாகவும் எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் மீறி தைரியமாக நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : தந்தை வாங்கிய பணத்திற்கு 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கந்துவட்டிக்காரர்..!! கடனை திருப்பி தராததால் ஆத்திரம்..!!

Tags :
கன்னியாகுமரி மாவட்டம்பாலியல் பலாத்காரம் ‘வழக்கறிஞர்
Advertisement
Next Article