For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையை அதிரவைத்த சம்பவம்..!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்..!! ஒரு நைட்டுக்கு ரூ.30,000..!!

Police arrested 7 people including a female broker who engaged schoolgirls in sex work in Chennai.
05:07 PM May 22, 2024 IST | Chella
சென்னையை அதிரவைத்த சம்பவம்     பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்     ஒரு நைட்டுக்கு ரூ 30 000
Advertisement

சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வராணி குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில் வளசரவாக்கம் ஜெய்நகர் 2-வது தெருவில் ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்ற முதியவர் சிக்கினார்.

12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபச்சார பெண் தரகர் நதியா (37) அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாக கூறினார். இதையடுத்து, நதியா அவரது சகோதரி சுமதி உள்ளிட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

பெண் புரோக்கரான நதியாவின் மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் பள்ளியில் படிக்கும் அழகான ஏழ்மையான மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வரும்படி தனது மகளிடம் நதியா கூறியிருக்கிறார். அதன்படி, அவரது மகளும், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று அழைத்து வந்துள்ளார். அப்போது நதியா, மாணவிகளிடம் அவர்களின் பெற்றோர்கள் குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார்.

அதில் தாயுடன் தனியாக இருக்கும் மாணவிகள் மற்றும் வறுமையால் பள்ளி படிப்பு முடிந்து பகுதி நேரமாக வேலை செய்யும் மாணவிகளை குறிவைத்து, அவர்களுக்கு செலவுக்கு ரூ.500, ரூ.1,000 கொடுத்து வசதியாக வாழலாம் என்று கூறி மூளை சலவை செய்து நதியா பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.

சிறுமிகளை கேட்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை ஒரு இரவுக்கு விலை பேசி தனது சகோதரி கணவர் ராமச்சந்திரனுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில், நதியா மாணவிகளை கடந்த ஓராண்டாக பலரிடம் அனுப்பி பணம் சம்பாதித்து கார் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ், பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா (37), அவரது சகோதரி சுமதி (43), சகோதரியின் 2-வது கணவர் ராமச்சந்திரன் (42), நேபாளத்தை சேர்ந்த இளம்பெண் மாயா ஒலி (29) மற்றும் பள்ளி மாணவிகள் என்று தெரிந்து அடிக்கடி பாலியல் உறவு வைத்த அசோக்குமார் (31), 70 வயது முதியவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

மீட்கப்பட்ட இரண்டு இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான புரோக்கர்களிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More : ’Goat’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்..!! அமெரிக்கா to சென்னை..!! விஜய்யின் அடுத்த பிளான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Tags :
Advertisement