For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

birthday: மிகப்பெரிய ஆளுமை!… தமிழகத்தின் இரும்பு பெண்மணி!… மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று!

07:26 AM Feb 24, 2024 IST | 1newsnationuser3
birthday  மிகப்பெரிய ஆளுமை … தமிழகத்தின் இரும்பு பெண்மணி … மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று
Advertisement

தமிகத்தில் உள்ள மிகப்பெரிய கழகங்களில் ஒன்றான அதிமுக.,வில் எம்ஜிஆரை தொடர்ந்து மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். 1970 மற்றும் 80களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயலலிதா, பல்வேறு மொழிகளிலும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Advertisement

1961ம் ஆண்டு ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா. 1965 ஏப்ரல் 9ல் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1965-ன் பிற்காலத்தில் ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் தமிழக முதல்வராகவும் ஆன எம்.ஜி. ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது. 1982 ஜூன் 4 - எம்.ஜி.ஆர். துவங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாநாட்டில் கட்சியில் இணைந்து அன்றுமுதல் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.

1983 காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக்கப்பட்ட ஜெயலலிதா, 1984 மார்ச் 24 ல் அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1988ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 ஜனவரி 21ம் தேதி சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு, சட்டமன்றத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவரானார்.

1989 மார்ச் 25 ல் தமிழக சட்டமன்றத்தில் பெரும் அமளி. தான் தாக்கப்பட்டதாகச் சொல்லி வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராகத்தான் அவைக்குள் நுழைவேன் என்று சபதம் எடுத்து சென்றார். பின்னர் 1991 ஜூலை 24ல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து, கூட்டணி சார்பில் மொத்தம் 225 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சராக, முதல் முறையாகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.

1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தார் ஜெயலலிதா. 168 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெறுகிறது அதிமுக. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார். 1996 டிசம்பர் 7ல் கலர் டிவி ஊழலில் கைதுசெய்யப்பட்டு 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

2000ம் ஆண்டு காலத்தில் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 2001 ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா நான்கு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றதால் முதல்வராகப் பதவியேற்றார். 21 செப்டம்பர் 2001 ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். 4 டிசம்பர் 2001 - பிளஸன்ட் ஸ்டே, டான்சி வழக்குகளில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட பின்னர், உச்ச நீதிமன்றமும் இந்த உத்தரவை 2003 நவம்பர் 4ல் உறுதி செய்கிறது.

2002ல் வழக்குகளில் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் முதலமைச்சராகிறார் ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே இரவில் பணிநீக்கம் செய்யப்பட்டது ஆகிய பரபரப்பான சம்பவங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நடந்தன. இதையடுத்து, 16 மே 2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா.

27 செப்டம்பர் 2014 ல் பெங்களூரில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. 17 அக்டோபர் 2014- பிணையில் விடுதலையான ஜெயலலிதா, 2015ல் சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லாக் குற்றங்களிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இதையடுத்து, 23 மே 2015- மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியிலிருந்த ஒரு முதலமைச்சர் மீண்டும் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. இதையடுத்து 2016, செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, செப்டம்பர் 5ம் தேதி காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

2017 ல் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சதித் திட்டம் தீட்டி, ஊழல் செய்து முறைகேடாக சொத்து சேர்த்தது உறுதியானது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திரைப்படத்தை தொடர்ந்து அரசியலில் எம்ஜிஆரின் வாரிசாக பல இன்னல்களை கடந்து வந்த ஜெயலலிதா தன கடுமையான திறமையான ஆளுமையால் தமிழகத்தில் 5முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அண்மையில் நடந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் இருந்த முதல்வர்களில் ஜெயலலிதா தான் சிறந்த முதல்வர் என பலரும் கருத்து கூறியுள்ளனர்.

ஜெயலலிதா, உயிருடன் இருந்த வரை தன் அமைச்சர்களை எப்போதும் பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க அனுமதித்ததில்லை என்றும் அவரும் எப்போதாவது தான் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. திமுகவில் பல தலைவர்கள் இருந்தாலும், அதிமுகவை தனி பெண்ணாக வழிநடத்தி பல முறை வென்றும் அசத்தியவர் ஜெயலலிதா.

Readmore:என்னது பிப்.26ஆம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியாகுமா அறிவிப்பு..?

Tags :
Advertisement