முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறுமிகளை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த கும்பல்..!! பெண் மீது பாய்ந்தது குண்டாஸ்..!! திருச்சியில் பரபரப்பு..!!

08:35 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

திருச்சி மாவட்டம் பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்திய அபிநிஷா, ரவிக்குமார், அசோக், பானு மற்றும் இரண்டு நபர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

Advertisement

இவர்கள் சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வழக்கின் குற்றவாளியான பானு என்பவர் சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவந்தது.

இதனால், மேற்படி குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மகளிர் தனிச்சிறையில் இருந்து வரும் குற்றவாளி பானு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

Tags :
குண்டர் தடுப்பு சட்டம்சிறுமிகள்திருச்சி மாவட்டம்பாலியல் தொழில்
Advertisement
Next Article