For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுக நிர்வாகியை சுத்துப் போட்ட கும்பல்..!! துண்டான கை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!! திண்டுக்கல்லில் ஷாக்..!!

A famous rowdy was hacked to death by unknown assailants in Dindigul.
08:43 AM Sep 27, 2024 IST | Chella
திமுக நிர்வாகியை சுத்துப் போட்ட கும்பல்     துண்டான கை     ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி     திண்டுக்கல்லில் ஷாக்
Advertisement

திமுக நிர்வாகி வெட்டிப் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர், திமுக வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், இரவு மாசி பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதையடுத்து, மாசி இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று தலை, கழுத்து, கை பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது. பின்னர், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாசியின் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, அங்கு திமுகவினரும் குவியத் தொடங்கியதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேரம் நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி, மாசியின் உடல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு சற்றே பரபரப்பு குறைந்தது. திமுக நிர்வாகி வெட்டிப் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : குரங்கு அம்மை..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அவசர கடிதம்..!! பீதியில் மக்கள்..!!

Tags :
Advertisement