For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை..!! மீண்டும் சோதனை..!! பெற்றோரிடம் விசாரணை..!!

10:34 AM Feb 08, 2024 IST | 1newsnationuser6
செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை     மீண்டும் சோதனை     பெற்றோரிடம் விசாரணை
Advertisement

கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ஆய்வு நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிடைத்துள்ள புதிய தகவலின்படி சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement