முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

earthquake: அதிகாலையில் குலுங்கிய பூமி!… அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!… அச்சத்தில் மக்கள்!

05:40 AM Mar 21, 2024 IST | 1newsnationuser3
Advertisement

earthquake: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்குள் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதாவது அதிகாலை 3.40 மணியளவில் கிழக்கு காமெங் பகுதியில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Readmore: பதவி கிடைக்குமா?… கிடைக்காதா?… பொன்முடி பதவி விவகார க்ளைமாக்ஸ்!… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Tags :
அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்அதிகாலையில் குலுங்கிய பூமிஅருணாச்சலப் பிரதேசம்
Advertisement
Next Article