உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்...! சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு... 6 பேர் கைது...!
ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (HUT) என்ற சர்வதேச அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த ஆறு பேரை தமிழக போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறையின் தகவலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த போலீஸார் குழு சோதனை நடத்தியதில் பொறியியல் பட்டதாரி ஹமீது உசேன், அவரது சகோதரர் மற்றும் தந்தையை கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கவுரவ பேராசிரியராக பணியாற்றி கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றவர் என்பது தெரியவந்தது. மேலும் ஹமீது உசேன் தனியாக யூடியூப் ஒன்றை நடத்தி வருவதும், அதில் இந்திய தேர்தலுக்கு எதிராகவும், கிலாபாத் சித்தாந்தம் தொடர்பாகவும் பேசியிருப்பது தெரியவந்தது.
ஹமீது உசேன் கலிபா ஆட்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சில வீடியோக்களில் ஜனநாயக தேர்தல் நடைமுறைக்கு எதிராக பேசியிருந்தார். உளவுத் தகவல் அடிப்படையில், தாம்பரம் மற்றும் வடசென்னை ஆகிய இடங்களில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இதையடுத்து காமராஜபுரத்தைச் சேர்ந்த முகமது (35), காமராஜபுரம் காதர் நவாஸ் ஷெரீப் (35), ஜாவித் (35), தொண்டியார்பேட்டை அகமது அலி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.