முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பைக் மீது டேங்கர் லாரி மோதி ஒரே வாகனத்தில் சென்ற 4 பேர் பலி..!! நெல்லையில் சோகம்..!!

While trying to cross the tanker truck, 4 people died on the spot when they got stuck in the wheel of the truck.
01:35 PM Sep 17, 2024 IST | Chella
Advertisement

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்றுக் கொண்டிருந்த நிலையில், டேங்கர் லாரியை கடக்க முயன்ற போது லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதாவது, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில், நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டேங்கர் லாரியை இவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, லாரி இருசக்கர வானத்தின் பின்புறத்தில் மோதியதால் 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : திடீரென ரயில் முன் தவறி விழுந்த பெண் எம்.எல்.ஏ..!! பரபரப்பு வீடியோ உள்ளே..!!

Tags :
இருசக்கர வாகனம்டேங்கர் லாரிநெல்லை மாவட்டம்
Advertisement
Next Article