முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி.! உடனே அப்ளை பண்ணுங்க.!

08:58 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழக மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழக மின் வாரியத் துறையில் டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிகளுக்கு 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Advertisement

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சி பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பு அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் உதவி ஊதியமாக ரூ.8000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது.

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை மின்வாரிய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு 20.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு வரங்களை அறிய tangedco.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Tags :
ApperenticesDiploma holdersemployment newsjob offertangedco
Advertisement
Next Article