For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Raid: நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை...! ரூ. 2.85 கோடி பறிமுதல்...!

06:38 AM Apr 19, 2024 IST | Vignesh
raid  நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை     ரூ  2 85 கோடி பறிமுதல்
Advertisement

சென்னை பல்லாவரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிஎல்ஆர் புளூ மெட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் அமைந்துள்ள நிறுவனம், கிரஷர் இயந்திரத்தில் பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் லிங்கேஸ்வரன், பழைய பல்லாவரத்தில் வசிக்கிறார். இந்த சோதனையை தொடர்ந்து லிங்கேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு 12.30 மணி முதல் 3.30 மணி வரை சோதனை செய்து ரூ. 1.85 கோடி ரொக்கமாக இருந்தது.

நிறுவனம் மற்றும் லிங்கேஸ்வரன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரின் நிறுவனம் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement