முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே..!! பள்ளிகளுக்கு இனி சனிக்கிழமை லீவு இல்லையாம்..!! கெடுபிடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை..!!

07:51 AM Jan 06, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

சமீபத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாள். அதன்படி, ஜனவரி 6 மற்றும் 20ஆம் தேதிகளிலும், பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னை மாவட்டம்பள்ளிகள்பள்ளிக்கல்வித்துறைவேலைநாட்கள்
Advertisement
Next Article