For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடிக்கடி உல்லாச டார்ச்சர்..!! பொறுமையை இழந்த இளம்பெண்..!! கள்ளக்காதலன் போலீசில் சிக்கியது எப்படி..?

The police arrested the swindler who, after knowing that her husband was abroad, cheated on the young woman and invited her to have fun and threatened to kill her.
12:36 PM Jul 03, 2024 IST | Chella
அடிக்கடி உல்லாச டார்ச்சர்     பொறுமையை இழந்த இளம்பெண்     கள்ளக்காதலன் போலீசில் சிக்கியது எப்படி
Advertisement

கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து இளம்பெண்ணை க்ரெக்ட் செய்து தொடர்ந்து உல்லாசத்துக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளுக்கு நாள் முகமதுவின் தொல்லை அதிகரிக்கவே இவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் அந்த பெண். ஆனால், அவர் விடாமல் தன்னுடன் தொடர்ந்து உல்லாசமாக இருக்காவிட்டால், கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறிவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் இளம்பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கள்ளக்காதலன் முகமது பிலால் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். இதனால் பொறுமை இழந்த இளம்பெண் வேறு வழியில்லாமல் உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : BREAKING | நீட் தேர்வுக்கு என்னதான் தீர்வு..? யோசனை சொன்ன தவெக தலைவர் விஜய்..!!

Tags :
Advertisement