முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயல் எதிரொலி..!! இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.7) விடுமுறை..!!

04:42 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மிக்ஜாம் புயலால் டிசம்பர் 4ஆம் தேதி விடாது பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக மாறின. நேற்று சென்னையில் மழையின் அளவு குறைந்த போதும் முதல் நாள் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் நீர் குளம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

Advertisement

தீவிர மழைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீட்புப் பணிகள் நடந்த வண்ணம் உள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை டிசம்பர் 7ஆம் தேதி 6 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம்போல் நாளை கல்வி நிறுவனங்கள் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
காஞ்சிபுரம்செங்கல்பட்டுபள்ளி - கல்லூரிகள்மிக்ஜாம் புயல்விடுமுறை
Advertisement
Next Article