முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இலங்கை கடற்படை தொடர் அடாவடி!. ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!.

Sri Lankan Navy Serial Adavadi!. 16 Rameswaram fishermen arrested!
06:13 AM Oct 24, 2024 IST | Kokila
Advertisement

Fishermens: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Advertisement

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

கடந்த மாதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளின் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

Readmore: Cyclone…! டானா புயல் எப்பொழுது கரையை கடக்கும்…? வானிலை மையம் அப்டேட்…!

Tags :
arrestRameswaram fishermensSri Lankan Navy
Advertisement
Next Article