For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாசி பௌர்ணமி வழிபாடு : அரசியல் அதிகாரம், பதவி உயர்வு கிடைக்க இந்த வழிபாடு பண்ணுங்க.!?

08:00 AM Feb 23, 2024 IST | 1newsnationuser5
மாசி பௌர்ணமி வழிபாடு   அரசியல் அதிகாரம்  பதவி உயர்வு கிடைக்க இந்த வழிபாடு பண்ணுங்க
Advertisement

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மாசி மாதத்தை மகத்துவமான மாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாசி மாதத்தில் இன்று பௌர்ணமி என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. எனவே மாசி மாத பௌர்ணமியில் வழிபாடு செய்தால் அரசியல், அதிகாரம், பதவி உயர்வு என பல நன்மைகள் கிடைக்கும்.

Advertisement

அனைத்து விதமான செல்வங்களும் உயர் பதவிகளும் கிடைப்பதற்கு இந்த பௌர்ணமி வழிபாடு செய்வது நல்லது. பௌர்ணமி நாட்களில் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் சகல நன்மைகளும், செல்வங்களும் நம்மை வந்து சேரும். இந்த வழிபாடு எப்படி செய்யலாம் என்பதை குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக மாசி பௌர்ணமி அன்று மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று காலையிலே எழுந்து நீராடி விரதம் இருந்து அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வேண்டி வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் சிவன் கோயிலுக்கு சென்று சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக ஈசனுக்கு படைத்தால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக சிவ தீட்சை பெற்ற யோகத்தை தரும். மாசி பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை வீட்டில் செய்து சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் அரசியல், தொழில், பணவரவு, நோய்நொடிகள் நீங்குவது போன்ற பல நன்மைகள் ஏற்படும்.

English summary : special worship in the month of Masi

Read more :

Tags :
Advertisement