For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கான விசேஷ உணவுகள்...! தெரிந்து கொள்வது அவசியம்...!!

03:31 PM Apr 04, 2024 IST | Baskar
பெண்களுக்கான விசேஷ உணவுகள்     தெரிந்து கொள்வது அவசியம்
Advertisement

நோயின்றி ஆரோக்கியமாக வாழ, விசேஷ உணவுகள் குறித்து பெண்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்

Advertisement

அந்த காலத்து பெண்கள் சத்தான உணவுகளை உண்டு, கடுமையாக வேலைகள் செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஊட்டச்சத்து குறைவாக உள்ள ஜங்க் ஃபுட் எனப்படும் மிட்டாய் , பேக்கரி பொருட்கள், ஐஸ்கிரீம் , உப்பு நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி உண்பதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு, ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் ரத்தப் போக்கு ஏற்படும். அதற்கு தேவையான ரத்தம் உற்பத்தியாக, இரும்புச் சத்து அவசியம். அதேபோல் பெண்களுக்கு, முடி மீது அதிக அக்கறை உள்ளது. அதனால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான கீரை, தானியங்கள், பழங்களை நிறைய சாப்பிட வேண்டும்.

குறிப்பாக வீட்டிலும், அலுவலகத்திலும், அயராது உழைக்கும் பெண்களுக்கு, வலுவான உடல் கட்டமைப்பு வேண்டும். அதற்கு, பலமான எலும்புகள் அவசியம். அதை, கால்சியம் வழங்குகிறது. இடுப்பு எலும்பு உறுதியாக இருந்தால் தான், பிரசவம் எளிதாக இருக்கும்.
மகப்பேறுக்குப் பின், குழந்தைக்கு பால் ஊட்டுவதற்கும், கால்சியம் அவசியம்.

அதுபோல, பெண் குழந்தைகள், பூப்பெய்திய உடன், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்க வேண்டும். குறிப்பாக, உளுந்து களி, உளுந்து வடை, நல்லெண்ணெய், வெந்தயம், பனை வெல்லம் போன்றவை அவசியம்.
மேலும், நாட்டுக்கோழி முட்டையை அப்படியே குடிக்க கொடுக்கலாம். இல்லை என்றால், குழந்தைகள் விரும்பும் விதத்தில், நாட்டுக்கோழி முட்டையை, பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

வட மாநிலத்தவர்கள், தங்கள் உணவில் தாமரைத் தண்டை அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். அதுபோல நாம் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால், இடுப்பு எலும்பு பலப்படும். இதற்காக, புரதச்சத்து மிகுந்த சோயா பீன்ஸ், வாரம் ஒரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், நாட்டுத் தக்காளி, விதையுள்ள உலர்ந்த திராட்சை, கறுப்பு திராட்சை, பேரீச்சம் பழம் உள்ளிட்டவற்றை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெரியவர்களான பின், மாதவிடாய் பிரச்னை இருக்காது.

பெரும்பாலான பெண்களுக்கு, 40 வயது ஆனதுமே, 'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் நின்று விடுதல் பிரச்னை உள்ளது. கால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்டால், சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க, கேழ்வரகு, சுண்டைக்காய், பாதாம் பருப்பு, பால், புடலங்காய், வெண்டைக்காய், முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிட வேண்டும். எள், வேர்க்கடலை, தனியா, வெந்தயம் போன்றவற்றை, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று பெண்கள் உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கண்டுவிடலாம்.

Advertisement